பீர் சேலஞ்ச்.. நாங்க இப்படித்தான் குடிப்போம்.. போட்டோ போட்டு மனோகர் பாரிக்கரை கலாய்த்த நெட்டிசன்ஸ்!
பெண்கள் பீர் குடிப்பது கவலை அளிப்பதாகக் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவா: மனோகர் பாரிக்கர் முதலில் போதை பொருள் பழக்கம் குறித்துப் பேசினார். அதில் கோவாவில் கொடுரமான போதைப் பொருட்கள் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
இப்போதெல்லாம் இந்தியாவில் பெண்கள் கூட பீர் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது மனதிற்கு மிகவும் கஷ்டத்தை தருகிறது என்றார்.
இந்தியா தனது சகிப்புத்தன்மையை தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது. எனக்கு ரொம்பவே பயமாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பீர் சேலஞ்ச்
இந்த நிலையில் அவரை எதிர்த்து பலரும் போஸ்ட் போட்டு வருகிறார்கள். முக்கியமாக பீர் சேலஞ்ச் என்று போட்டோ போட்டு இருக்கிறார்கள். இதில் போட்டோ போட்டது எல்லாருமே பெண்கள். இதற்காக #GirlsWhoDrinkBeer 'கேர்ள்ஸ் ஹு டிரிங் பீர்' என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகி இருக்கிறது.
|
இதான் ஒரே வழி
பெண்கள் பீர் பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பாலில் டீ போடுவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
|
அப்பாவோடு
இந்த சேலஞ்சில் இவர் தனது அப்பாவோட புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். ராஜா ராணி சத்தியராஜ், நயன்தாரா போல அப்பாவோட பீர் குடுக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார்.
|
இன்னொருவர்
இவரும் தன்னுடைய அப்பாவோட பீர் குடிக்கும் வீடியோவை வெளியிட்டு சமயங்களில் நான் அப்பாவோட சேர்ந்து கொள்வேன் என்றுள்ளார்.
|
பழைய
இவர் இதோ உண்மையான போராளியை பாருங்கள் என்று பாட்டி ஒருவர் பீர் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
|
போர் ஆமா போர்
இவர் ''பெண்கள் பீர் குடிப்பதை பார்த்து பயப்படாதீர்கள். நீங்கள் வெடிகுண்டு உடை அணிந்து இந்தியாவிற்குள் வரும் தீவிரவாத பெண்களை நினைத்து மட்டும்தான் பயப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.