For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை.. மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்!

ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எம்எல்ஏ சிவசேரி சோமாவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை இவர்கள் காரில் ஒன்றாக சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Maoist attack: MLA and Former MLA killed in Andhra Pradesh

உடன் சென்ற பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாவலருடன் சேர்த்து மூன்று பேர் பலியாகி உள்ளனர். மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்லப்பட்ட கிடாரி, அரக்கு தொகுதி எம்எல்ஏ ஆவார். அரக்கு தொகுதியின் தும்பரிகூட மண்டல் என்ற பகுதியில் இந்த கொலை நடந்து இருக்கிறது.

போலீஸ் தற்போது அங்கு விரைந்து உள்ளது. சுட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

English summary
Visakhapatnam: Araku MLA Kidari Sarveswara Rao and former Araku MLA Siveri Soma shot dead by Naxals in Dumbriguda Mandal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X