பணம் கேட்டு மிரட்டல்… தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டு சுட்டுக் கொலை
Recommended Video
வயநாடு: கேரள எல்லைப் பகுதியான வயநாடு மாவட்டம் லக்கிடி பகுதியில் நேற்று இரவு போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் என்கவுண்டர் செய்யப்பட்டார், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைத்திரி அடுத்த லக்கிடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவு விடுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் 4 மாவோயிஸ்டுகள் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த விடுதியின், மேலாளர் அதே பகுதியில் முகாமிட்டுள்ள அதிரடி விரைவு படையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த அதிரடிப்படையினர் மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், இருவருக்கு குண்டடிபட்டதாக கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகளும் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதனை அடுத்து அருகே இருந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் நுழைந்தனர். அதிரடி விரைவு படையினரும் அவர்களை பின்தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. மற்ற மூன்று பேர்களை தேடும் பணியை தொடர்ந்து வருகிறது.
ரபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது.. மோடியை விசாரியுங்கள்.. ராகுல் பகீர் பேட்டி!
தப்பி ஓடிய 3 மாவோயிஸ்டுகள் தமிழகப் பகுதியில் நுழைந்து இருக்கக்கூடும் என கூறப்படுவதால் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.