ஜார்க்கண்ட்டில் குண்டு வெடிப்பு.. மாவோயிஸ்ட் தாக்குதல்.. 11 பாதுகாப்பு படைவீரர்கள் படுகாயம்!
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 11 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் சராய்கேலா பகுதியில் உள்ள குச்சாய் எனும் இடத்தில் பாதுகாப்பு படையினர் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 5 மணியளவில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு நிகழ்த்தினர். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடும் நடத்திவிட்டு தப்பினர்.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே.. ராமதாஸை விமர்சனம் செய்த முரசொலி
இதில் மத்திய பாதுகாப்புப்படையின் கோப்ரா பிரிவை சேர்ந்த 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராஞ்சி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த படைப்பிரிவின் பாதுகாப்பு முகாம் அகற்றப்பட்டது. வீரர்களும் அங்கிருந்து வெறியேற்றப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.