For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதனைத் தங்கம்... மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது... வழங்கினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்ம ஸ்ரீ விருது இன்று வழங்கினார்.

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தற்கு இந்தியா முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டு மற்றும் பரிசு மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்க மத்திய அரசு அறிவித்து.

Mariyappan Thangavelu conferred with Padma Shri award

பத்ம விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில், மாரியப்பன் தங்கவேலுவிற்கு பத்ம ஸ்ரீ விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். மேலும், ஒலிம்பிக்கில் 4-வது இடத்தை பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபாகரம்கர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பாடகர் கைலாஷ்கேர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

இதுதவிர பாடகர் ஜேசுதாஸ், சத்குரு ஜக்கி வாசுதேவ், மறைந்த பத்திரிகையாளர் சோ சார்பில் அவரது மனைவி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

English summary
President Pranab Mukherjee conferred Padma Shri award to Mariyappan Thangavelu at the Rashtripati Bhawan in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X