பாஸ்போர்ட் பெற பெண்கள் திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை.. புதிய முறைக்கு வரவேற்பு
பாஸ்போர்ட் பெற திருமணம் ஆன பெண்கள் திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பாஸ்போர்ட் பெற திருமணம் ஆன பெண்கள் இனி திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இனி திருமணமான பெண்கள் தங்களது திருமண சான்றிதழை கொடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆன தகவலை மட்டும் தெரிவித்தால் போதும். அதேபோல் விவாகரத்து ஆன பெண்கள், முன்னாள் திருமணத்தின் விவரங்களை அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பொறுப்பேற்றதில் இருந்தே அந்த துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு வெளியுறவு விவகாரங்கள் மிகவும் எளிமையாக நடக்கும் வகையில் நிறைய வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்புக்கு பெரிய அளவில் ஆதரவு பெருகி உள்ளது. அவரின் சில அதிரடியாக முடிவுகளுக்கு மக்கள் பெருவாரியாக மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று வந்துள்ள இந்த அறிவிப்புக்கும் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இது பெண்களுக்கு அதிக அளவில் உதவும் என்று கூறப்படுகிறது.