காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம்.. நீர்வளத்துறை செயலாளர் அறிவிப்பு
காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி: காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதை தாக்கல் செய்யாமல் இழுத்துக் கொண்டே வந்தது.
அதன் பின் பல முறை இழுத்தடித்து கடைசியாக திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை ஒத்திவைத்தது. மேலும் வரைவு திட்டத்தை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆணைய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர் நியமனம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாக உள்ளது.
காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். நீர் வளத்துறை ஆணையர் மசூத் உசேன் காவிரி ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.