For Quick Alerts
For Daily Alerts
Just In
அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம்
டெல்லி: அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.
தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக அதிகரிக்க வகை செய்யும் மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி,
- அனைத்துத் துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் மகப்பேறு கால விடுப்பு கிடைக்கும்
- 50க்கும் மேற்பட்ட ஊழியர் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்
- பச்சிளம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு 3 மாதம் விடுப்பு கிடைக்கும்
- மசோதா நிறைவேறியதால் 10.80 லட்சம் பேர் பயன்பெறுவர்.
Comments
English summary
The Maternity Benefit Amendment Bill was passed in Rajya Sabha on Thursday.
Story first published: Thursday, August 11, 2016, 17:31 [IST]