காங்.குக்காக ஓட்டுப் போட்டு வேஸ்ட் பண்ணாதீ்ங்க.. முஸ்லீம்களுக்கு மாயா கோரிக்கை
காஸியாபாத்: காங்கிரஸை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும். அவர்களுக்கு வாக்களித்து உங்களது ஓட்டுக்களை வீணடிக்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
உ.பி. மாநிலம் காஸியாபாத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் புஹார, இஸ்லாமியர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது குறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், எனது முஸ்லிம் சகோதர்களுக்கு ஓர் வேண்டுகோள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டாம். அந்த கட்சி, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் செல்வாக்கை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவதன் மூலம் உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம்.
பாரதிய ஜனதா அல்லது சமாஜ்வாடி கட்சிக்கும் ஆதரவு தர வேண்டாம். அவற்றிற்கு பதிலாக சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
காஜியாபாத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பாபரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார் மாயாவதி
முன்னதாக காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து இமாம் புஹாரி அறிவித்தபோது, பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்து உங்களது ஓட்டுக்களை வீணடிக்காதீர்கள் என்று இஸ்லாமியர்களுககு அழைப்பு விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.--