நெருங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி ஆரம்பிக்கிறது. இந்த ஆட்சியில் நடக்க போகும் கடைசி மழைக்கால கூட்டத்தொடர் இதுதான் . இதனால் இந்த கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த தொடரில் பல முக்கியமான விஷயங்களை பேச எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக டெல்லியில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை செய்தது. குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, டி.ராஜா, சரத்பவார், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆலோசனை செய்தனர்.
கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து விவாதம் செய்தனர். முக்கியமாக மத்திய பாஜக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூடி இருக்கும் நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
Delhi: Meeting of opposition leaders underway in Parliament library ahead of the monsoon session, which begins on July 18. pic.twitter.com/9ZXZntYHy2
— ANI (@ANI) July 16, 2018