அழுகிய நிலையில் சிதிலமடைந்த உடல்.. மேகாலயா சுரங்கத்திலிருந்து ஒருவரின் உடல் மீட்பு!
மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களில் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.
ஷில்லாங்: மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களில் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.
மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் சிக்கி இருக்கும் நபர்களை மீட்கும்படி இன்னும் நடந்து வருகிறது. அந்த சுரங்கத்தில் சிக்கியவர்கள் அனைவரும் இருந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
39 நாட்களுக்கு முன் 15 பணியாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினார்கள். இப்போதுதான் அங்கிருந்து முதல் நபரின் உடல் மீட்கப்பட்டு இருக்கிறது.
சுரங்கத்தில் சிக்கினார்கள்
ஒரு மாதம் முன் மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டது. அங்கு இருக்கும் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் அனுமதி பெறப்படாத நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடந்த டிசம்பர் 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள்.
மிக மெதுவாக நடந்தது
சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் 39 நாட்களாக இந்த மீட்பு பணியில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. சுரங்கத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றுவது கடினமான பணியாக இருந்ததால் யாரையும் மீட்க முடியவில்லை.
கண்டுபிடித்தனர்
கடந்த 7 நாட்களுக்கு முன் அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் Underwater Remotely Operated Vehicle எனப்படும் சிறிய ரோபோட் மோட்டார் வாகனம் மூலம் இவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைடுத்தே சுரங்கத்தில் இருந் மற்றவர்களும் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
மீட்கப்ட்டது
தற்போது மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களில் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு இருக்கிறது. அவரின் உடல் மிகவும் சிதிலமடைந்து அழுகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இவரின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மீதமுள்ளவர்களை மீட்கும்பணி நடந்து வருகிறது.