மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 பேர்.. மீட்பு படையினருக்கு சவால் விடும் எலி துளைகள்.. பகீர் கதை!
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரை மீட்பது பெரிய சவாலான காரியமாக மாறியுள்ளது.
Recommended Video
ஷில்லாங்: மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரை மீட்பது பெரிய சவாலான காரியமாக மாறியுள்ளது.
மேகாலயாவின் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த இரண்டு வாரம் முன் 15 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் கடந்த 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள்.இந்த ஊழியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ரேட் ஹோல் என்றால் என்ன
இந்த பணியாளர்கள் மாட்டிக் கொண்டு சுரங்கங்கள் ரேட் ஹோல் (rat hole) - எலி துளை சுரங்கங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் துளைகள் இருக்கும். கைகளால் தோண்டப்பட்ட சுரங்கங்கள் என்பதால் இந்த சுரங்கங்களை ரேட் ஹோல் சுரங்கங்கள் என்று அழைக்கிறார்கள். பார்க்கக் எலிகள் பெரிய அளவில் நோண்டிய குழிகள் போல இது இருக்கும்.
எப்படி செய்வார்கள்
இந்த சுரங்கங்களை பெரும்பாலும் கைகளால் ஆயுதங்கள் வைத்து தோண்டுவார்கள். சில சமயங்களில், சிறிய சிறிய கருவிகள் வைத்தும் தோண்டுவார்கள். ஆனால் என்னதான் எலி துளை சுரங்கங்களாக இருந்தாலும் 300 அடி வரை கூட இந்த சுரங்கங்கள் அமைக்கப்படும். மேகாலயாவில் பணியாளர்கள் மாட்டி இருக்கும் சுரங்கங்களும் 300 அடி கொண்ட சுரங்கங்கள்தான்.
தடை செய்தது
இது போன்ற எலி துளை சுரங்கங்கள் மேகாலயாவில் நிறைய உள்ளது. ஆனால் ஏற்கனவே அங்கு ஹைகோர்ட், சுரங்கங்களை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் மேகாலயாவில் அனுமதியின்றி நிறைய சுரங்கங்கள் இப்படி செயல்பட்டு வருகிறது.
அதில்தான் விழுந்தனர்
இப்படி அனுமதி இல்லாமல் செயல்பட்ட சுரங்கத்தில்தான் பணியாளர்கள் விழுந்தனர். இது கீழே செல்ல செல்ல சிறியதாக ஆகிக்கொண்டே இருக்கும். இதில் இறங்கி மீட்பு பணிகளை செய்வது மிகவும் சிரமம். இதன் காரணமாகவே இதில் விழுந்து இருக்கும் பணியாளர்களை மீட்பது பெரிய சவாலான காரியமாக மாறியுள்ளது.