For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்த 15 பேரும் உயிரோட இருக்க வாய்ப்பில்லை.. மேகாலயாவில் கைவிரித்த மீட்பு குழு.. கதறும் குடும்பம்!

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரும் இறந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மேகாலயா குகையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

    ஷில்லாங்: மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரும் இறந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

    மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடந்த 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள்.

    அப்போது சிக்கிய இந்த ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 14 நாட்களாக அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

     எதுவும் இல்லை

    எதுவும் இல்லை

    இவர்கள் எங்கே இருக்கிறார்கள். என்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற விவரம் கூட யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் கடந்த 14 நாட்களாக உணவு தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     பணி நிறுத்தம்

    பணி நிறுத்தம்

    போதிய உபகரணங்கள் இல்லாததால் தற்போது மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதிக அழுத்தம் கொண்ட பம்புகளை கொண்டு வர வேண்டும் என்று மீட்பு பணி நிறுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 4 நாட்களாக அங்கு எந்த விதமான மீட்பு பணியும் செய்யபடவில்லை.

     சந்தேகம்தான்

    சந்தேகம்தான்

    மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.14 நாட்களாக மீட்புபணி நடந்தும் ஒருவர் கூட மீட்கப்படவில்லை. இதனால் அவர்கள் 15 பேரும் இருந்திருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

    கொடூரம்

    கொடூரம்

    இவர்களின் குடும்பம் தற்போது பெரும் பதற்றத்தில் இருக்கிறது. மீட்பு படையினர் கைவிட்டதை அடுத்து இவர்கள் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு தங்கள் உறவினர்களுக்காக காத்து இருக்கிறார்கள். சுரங்கம் இருக்கும் இடத்திற்கு வெளியே கடவுள் படங்களை வைத்து வழிபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

    English summary
    Meghalaya Mine Rescue: There is no hope, All the Labourers trapped inside are feared dead says NDMD.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X