இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் அந்த ஆரஞ்சு நிறம்தான்.. மெகபூபா முஃப்தி
Recommended Video
ஸ்ரீநகர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துடன் மோதிய இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் அந்த ஆரஞ்சு நிற ஜெர்ஸிதான் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் நேற்றைய தினம் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதியது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்களை குவித்தது.
மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில் 306 ரன்கள் எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 2019-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக தோல்வி அடைந்தது.
காலையில் வெடித்த திடீர் பஸ் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்த சென்னை.. குறைந்த பஸ்களே ஓடுவதால் தொடரும் அவதி!
ஜம்மு- காஷ்மீர்
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கூறுகையில், என்னை மூடநம்பிக்கைவாதி என கூறினாலும் நான் சொல்ல வேண்டியதை சொல்லித்தான் தீருவேன்.
நீல நிற ஜெர்ஸி
இந்திய அணி உலகக் கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு புதிய ஆரஞ்சு நிற ஜெர்ஸியே காரணம் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்திய அணி இந்த போட்டிக்கு வழக்கமாக அணியும் நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸி அணிந்து விளையாடியது.
|
புதிய ஜெர்ஸி
இந்த திடீர் மாற்றத்துக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் இங்கிலாந்து அணியின் ஜெர்ஸியும் நீல நிறத்தில் இருந்ததால் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தீர்வு
சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து நேற்றைய தினம் ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சர்வதேச தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
முழு ஆற்றல்
சென்னை நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் நாம் கிரிக்கெட் அணியின் சீருடை குறித்து பேசி வருகிறோம். நிறம் விஷயத்தில் நாம் நமது முழு ஆற்றலை செலவிடுகிறோம் என கூறியிருந்த முஃப்தி இன்று திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.