தீவிரவாத தாக்குதலில் அமர்நாத் பயணிகள் 7 பலி.. காஷ்மீர் முதல்வர், ஆளுநர் நேரில் அஞ்சலி
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பலியான அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேரின் உடலுக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் ஆளுநர் என்.என்.வோஹ்ரா, துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் ஆகியோர் மலர் வளையம்
ஜம்மு: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்களின் உடலுக்கு காஷ்மீர் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி தங்களின் பயணத்தைத் தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று இரவு அனந்தநாக் மாவட்டம் பாடிங்கு என்ற பகுதி வழியாக யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். அதில், 7 யாத்ரீகர்கள் பரிதாபமாக பலியாகினர். 3 போலீசார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
தீவிரவாதத்திற்கு பலியான 7 பேரின் உடலுக்கு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி, ஆளுநர் என்.என்.வோஹ்ரா, துணை முதல்வர் நிர்மல் சிங்க் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.