For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய்ஜி பாஜக தலைவராக இருந்தாலும் காஷ்மீரின் உணர்வுகளை புரிந்து கொண்டார்.. மெஹபூபா "ரீகால்ஸ்"

Google Oneindia Tamil News

Recommended Video

    Article 370 Removed | நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?-வீடியோ

    காஷ்மீர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவராக இருந்த போதிலும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டிருந்தார். ஆனால் இன்று பதற்றமான சூழலில் அவர் இல்லாததை நினைத்து வருந்துகிறோம் என முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்தார்.

    காஷ்மீரில் கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள், அமர்நாத் யாத்ரீகர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

     Mehbooba Mufti recalls Atal Bihari Vajpayee

    அது போல் நேற்று இரவு முதல் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மெஹபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் கூறுகையில் வாஜ்பாய் அவர்கள், பாஜக தலைவராக இருந்தாலும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் அன்பை பெற்றார். இன்று அவர் இல்லாதது வருத்தமாக உள்ளது என பழைய நினைவுகளை நினைவுக்கூர்ந்துள்ளார்.

    English summary
    EX CM of Kashmir, Mehbooba Mufti tweets by remembering former PM and BJP Senior leader Atal Bihari Vajpayee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X