For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் வீட்டுக்காவல்... வெளியே போக முடியவில்லை...மெகபூபா முப்தி குற்றச்சாட்டு!

Google Oneindia Tamil News

ஜம்மு: தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் மீதான எதிர்ப்புகளை தடுக்க தடுப்புக்காவல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த வாரமும் இதேபோல் தான் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மெகபூபா முப்தி கூறி இருந்தார். ஆனால் போலீசார் இதனை மறுத்து இருந்தனர்.

Mehbooba Mufti said she’s detained again

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது.அங்கு பதற்றம் ஏற்படுவதை தவிர்க்க ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள்பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது. அவர்கள் ஓராண்டுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். இதேபோல் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே மெகபூபா முப்தி கடந்த வாரம் தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்தார். தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ள தனது கட்சி தலைவர் வாகித் உர் ரகுமான் பர்ராவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற புல்வாமா செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை என்று கூறி இருந்தார். ஆனால் இதனை மறுத்த போலீசார், மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகக் அவர் புல்வாமா செல்ல அனுமதிக்கப்படவில்லை என விளக்கம் அளித்தனர்.

பாரத் பந்த்:டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி புகார்பாரத் பந்த்:டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி புகார்

இந்த நிலையில் மெகபூபா முப்தி தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெகபூபா முப்தி கூறியுள்ளதாவது :-

பட்காம் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க விரும்புகிறேன். ஆனால், எனது வீட்டிற்கு வெளியே ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ள காவல் துறை மற்றும் பாதுகாப்பு என்னை தடுத்து நிறுத்துகின்றனர். அரசின் மீதான எதிர்ப்புகள் வரும்போது அதனை தடுக்க தடுப்புக்காவல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

English summary
Former Jammu and Kashmir Chief Minister Mehbooba Mufti has again accused him of being remanded in custody
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X