For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் மக்களுக்கு..சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை..தேர்தலில் போட்டியில்லை..மெஹபூபா முப்தி அதிரடி!

Google Oneindia Tamil News

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்கப்படும் வரை எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும் நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் காங்கிரஸ்தான் கடைசி இடத்தில் தள்ளப்பட்டது.

Mehbooba Mufti says Wont Fight Elections Till Article 370 Restored

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. பாஜக இரண்டாவது இடத்தை பிடித்தபோதிலும், அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசின் கோபத்தை காட்டுகிறது என அந்த மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி இந்த தேர்தல் குறித்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி!ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி!

ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் எங்களுக்கு மிகவும் ஊக்கம் அளிப்பதுபோல் உள்ளது. இந்த தேர்தலில் நாங்கள்(குப்கர் கூட்டணி கட்சிகள்) போட்டியாளர்களாக இருந்தோம், ஆனால் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக நாங்கள் ஒன்றிணைந்தோம். நாங்கள் தேர்தலுக்காக மட்டும் இணையவில்லை.

காஷ்மீர் மக்கள் இழந்த உரிமையை( சிறப்பு அந்தஸ்து ரத்து) மீட்டெடுக்கும் பெரிய காரணத்திற்காக சேர்ந்து உள்ளோம். இதில் முடிவு காணும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்கப்படும் வரை எந்தவொரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் என்று மெஹபூபா முப்தி கூறினார்.

English summary
Mehbooba Mufti, the former chief minister of Jammu and Kashmir and leader of the National Convention Party, has said he will not contest any election until Section 370 of the Special Status Act for Jammu and Kashmir is repealed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X