For Daily Alerts
Just In
காஷ்மீர் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்க ஆயத்தம்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் புதிய முதல்வராக மறைந்த முப்தி முகமது சையது மகள், மெகபூபா முப்தி விரைவில் பதவியேற்க உள்ளார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பதவி வகித்த மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முப்தி முகமது சையது, கடந்த 7ம்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இதையடுத்து புதிய முதல்வராக முப்தியின் மகளும், எம்.பியுமான மெகபூபாவை அவர் சார்ந்த கட்சி முன்னிருத்தியது.
முப்தி முகமது சையது இறந்து 7 நாட்கள் அரச முறை துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், தன்னால் முதல்வராக பதவியேற்க முடியாது என்று, மெகபூபா அறிவித்துவிட்டார்.
7 நாள் துக்கம் முடிவடைய உள்ள நிலையில், ஜனவரி 13ம் தேதிக்கு பிறகு முதல்வராக பதவியேற்க மெகபூபா ஆயத்தமாகியுள்ளதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
PDP president Mehbooba Mufti will take oath as the Jammu and Kashmir chief minister anytime after the end of the seven-day official mourning for her late father Mufti Mohammad Sayeed. The state announced a seven-day official mourning when Sayeed passed away at AIIMS in New Delhi on January 7.
Story first published: Tuesday, January 12, 2016, 18:15 [IST]