அதெல்லாம் இந்தியா வர முடியாது.. வங்கி கொள்ளையன் நீரவ் மோடியின் கூட்டாளி மெஹூல் சோக்சி திமிர் கடிதம்
நீரவ் மோடியின் உறவினரும், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் முக்கிய புள்ளியான மெஹுல் சோக்சி இந்தியா திரும்பி வர முடியாது என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
Recommended Video
டெல்லி: நீரவ் மோடியின் உறவினரும், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் முக்கிய புள்ளியான மெஹுல் சோக்சி இந்தியா திரும்பி வர முடியாது என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். சிபிஐ நீரவ் மோடியின் உறவினரான மெஹுல் சோக்சிக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது.
அவரை உடனடியாக இந்தியா வர சொல்லி மெயில் அனுப்பி உள்ளது. ஆனால் மெஹுல் சோக்சி தான் இந்தியா வர முடியாது என்றுள்ளார்.
அவர் தனது மெயிலில் ''எனக்கு இப்போதுதான் 6 மாதம் முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. என்னால் அதிகம் பயணம் செய்ய முடியாது. என்னுடைய பாஸ்போர்ட்டை வேறு முடக்கி இருக்கிறார்கள். என்னால் இந்தியா வர முடியாது'' என்றுள்ளார்.
மேலும் எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கிறது என்றும் கூறியுள்ளார். நீரவ் மோடியும் இதே பதிலைத்தான் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.