இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி தொடருமாம்! கோத்தபயவிடம் சொன்ன சிவசங்கர மேனன்
இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் இடையேயான கடல் வழி பாதுகாப்பு தொடர்பான மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்துப் பேசினார்.
அப்போது இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்ற உறுதியை அவர் கோத்தபய ராஜபக்சேவிடம் அளித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் நேற்றும், இன்றும் கூட இலங்கை கடற்படையினரால தாக்கப்பட்டு சிறை பிடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் இந்திய வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு, அவருடன் சிவசங்கர மேனன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.