For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற நள்ளிரவில் கூடுகிறது நாடாளுமன்றம்!

ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.

பல எதிர்ப்புகளுக்கு இடையே ஜிஎஸ்டி மசோதா வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதற்காக ஜூன் 30ம் தேதி இரவு 11மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Midnight event at Parliament to mark GST rollout on June30th

ஜூலை 1ம் தேதி 12.10 மணி வரைக்கும் நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். இந்த சிறப்புக் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

கூட்டத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உரையாற்றுவார் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார். கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தினால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

English summary
A special event is likely to be held at the historic Central Hall of Parliament on June 30 to mark the roll-out of the Goods and Services Tax. The midnight function to launch the GST will be held between 11 PM and 12.10 AM on June 30 effectively ushering in India's new tax regime on July 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X