For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சூரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவு

By Siva
Google Oneindia Tamil News

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் இன்று அதிகாலை வேளையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் தைகாட்டுச்சேரி, ஒல்லூர் மற்றும் எடக்குனி ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளது.

Mild quake struck Thrissur

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகியிருந்தது. நில அதிர்வால் பொருட் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அதிகாலை வேளையில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் பலருக்கும் நில அதிர்வு ஏற்பட்டதே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சூரில் நில அதிர்வு ஏற்பட்ட அதே நேரத்தில் அமெரிக்காவின் மேற்கு பகுதியிலும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Mild quake measuring 3 in the Richter scale struck Thrissur at 3.30 am on tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X