For Daily Alerts
Just In
டெல்லி, மிசோராம் மாநிலங்களில் லேசான நில நடுக்கம்.. மக்கள் பீதி
டெல்லியில் இன்று காலை திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
டெல்லி: டெல்லி, மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
டெல்லியில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. ரிக்டர் ஸ்கேலில் 3 ஆகப் பதிவானதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இதேபோல் மிசோரமிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இங்கு 3.7ஆகப் பதிவானது. இதனால் வீடுகள் அதிர்ந்தால் வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
Comments
English summary
Mild tremors in Delhi, Mizrom today morning. In Delhi earth quack measured as 3. In Mizoram it measured as 3.7.
Story first published: Wednesday, January 18, 2017, 9:53 [IST]