ஏதாவது போதை வஸ்து சாப்பிட்டீங்களா ராகுல்.. சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கிண்டல்!
ஏதாவது போதை வஸ்து சாப்பிட்டீர்களா என மத்திய அமைச்சர் ஹர்சிம்ராட் கௌர் பாதல் ராகுலை கேள்வி எழுப்பினார்.
டெல்லி: ஏதாவது போதை வஸ்துக்களை சாப்பிட்டீர்களா என மத்திய அமைச்சர் ஹர்சிம்ராட் கௌர் ராகுலை கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காத நிலையில் மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர மாநில எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது.
அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதுதான் ஹாட்டாப்பிக்காக இருந்தது.
சிரிப்பில் உண்மை
அப்போது ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார். அவர் என் கண்ணை பார்த்து பேசுவதில்லை. அவரது சிரிப்பில் உண்மை இல்லை.
அமளி
பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை சிறிது நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
ராகுலை தட்டிக் கொடுத்தார்
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்று மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார். மோடியும் ராகுலை தட்டிக் கொடுத்தார்.
அகாலி தளம்
இதை சற்று எதிர்பாராத மோடி உள்பட ஆளுங்கட்சியினர் வரவேற்றனர். ராகுல் காந்தியின் பேச்சை ஆளுங்கட்சியினரும் வரவேற்றதாக ராகுல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோடியை ராகுல் அணைத்தது குறித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ராட் கௌர் பாதல் (அகாலி தளம்) பேசினார்.
முன்னா பாய் எம்பிபிஎஸ்
அவர் கூறுகையில் ராகுல் காந்தி இது நாடாளுமன்றம், முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் வரும் ஹீரோ போல் ராகுல் கட்டி பிடி வைத்தியம் செய்கிறார். பஞ்சாப் மாநிலத்தவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர்களை பார்த்து நான் ஒன்று கேட்கிறேன்.
எந்த வஸ்து
ராகுல் அவர்களே நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர் எந்த போதை வஸ்துவை சாப்பிட்டுவிட்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.