For Daily Alerts
Just In
இந்தியாவில் முதன்முறையாக “இ-ஆபிஸ்” முறைக்கு மாறிய வெளியுறவுத்துறை!
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய வெளியுறவுத்துறை முழுவதும் இ-ஆபிஸ் எனப்படும் கணினிமயமாகியுள்ளது.
இது நாட்டிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்றவுடன் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்குமான அலுவலகங்கள் நவீன முறைக்கு மாற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து அனைத்துத்துறை அலுவலகங்களும் இ-ஆபிஸ் முறைக்கு மாறி வருகின்றன. இதில் முதலாவதாக மத்திய வெளியுறவுத்துறை முழுவதும் கணினி மயமாக மாறியுள்ளது.
வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் கையெழுத்துடன் இந்த புதிய முறை துவங்கப்பட்டது. இதன் மூலம் அலுவலகத்தி்ல் வெளிப்படைதன்மை அதிகரிப்பு மற்றும் பேப்பர் போன்ற செலவினம் குறைவதால் அலுவலக நடைமுறைச் செலவுகளும் குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
Comments
English summary
The Ministry of External Affairs on Thursday launched its e-office, marking the first virtual office by an Indian ministry. Foreign Secretary Sujatha Singh launched the e-office by appending her digital signature to a proposal submitted electronically seeking her approval for implementation of e-Office in the Ministry.
Story first published: Friday, July 4, 2014, 14:14 [IST]