For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன கொடூரம்.. பாம்பு கடித்து ஐசியூவில் அட்மிட் ஆன சிறுமி.. கட்டி வைத்து சீரழித்த ஐவர்!

ஐசியூ வார்ட்டில் சிகிச்சை பெறும் சிறுமியை கயவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

உத்திரப்பிரதேசம்: காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே????

உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 5 நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருத்தி பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். பண்ணையை சுற்றி நிறைய புதர்கள் இருந்திருக்கிறது. அதனால் அங்கிருந்த ஒரு பாம்பு ஒன்று பண்ணைக்குள் நுழைந்து வேலை பார்த்த சிறுமியை கடித்து விட்டது.

உடனடி சிகிச்சை

உடனடி சிகிச்சை

வலியால் அலறி துடித்த சிறுமியை உடனடியாக குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி சேர்க்கப்பட்டாள். உடனடியாக சிகிச்சையும் நடைபெற ஆரம்பித்தது. ஆபத்திலிருந்து உயிர் பிழைத்தாலும் சிறுமி இன்னமும் ஐசியூவில்தான் இருக்கிறாள்.

கட்டாயப்படுத்தி ஊசி

கட்டாயப்படுத்தி ஊசி

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு ஐசியூ பிரிவில் உள்ள அறையில் சிறுமி தனியாக தூங்கி கொண்டு இருக்கிறாள். ஐசியூ பிரிவில் ஹாஸ்பிடல் கம்புண்டர் சுனில் ஷர்மா என்பவர் யூனிபார்முடனும் சிறுமி அறைக்குள் நுழைகிறார். அவருடன் வேறு 4 ஆட்கள் என 5 பேருமாக சேர்ந்து சிறுமி அறைக்குள் நுழைந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஊசி ஒன்றினை எடுத்து கட்டாயப்படுத்தி போட முயன்றனர்.

கட்டி வைத்து பலாத்காரம்

கட்டி வைத்து பலாத்காரம்

ஆனால் ஏற்கனவே உடல்நலம் குன்றிய சிறுமியோ அந்த 5 பேரையும் முடிந்தவரை எதிர்த்து போராடி இருக்கிறாள். ஊசி போட முயன்றபோதெல்லாம் கைகளாலேயே தட்டி தட்டி விட்டிருக்கிறாள். இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் சிறுமியை அந்த கட்டிலோடு கட்டிப் போட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

விரைந்த வந்த போலீசாரும் ஐசியூவில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரம் நடைபெற்ற நேரத்தில் ஐசியூ பிரிவில் நிறைய நோயாளிகளும் 3 ஹாஸ்பிடல் ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிறுமி.. அதுவும் பாம்பு கடித்ததால் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் ஒருத்தியை 5 பேரும் கட்டி வைத்து நாசம் செய்தது உத்திரபிரதேச மாநிலம் அல்லாது நாட்டையே அதிர வைத்துள்ளது.

English summary
Minor girl gang-raped inside ICU by hospital by staff including 5 in Uttar Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X