மோடிக்கு எதிராக அமர்த்தியா சென் கருத்து- மாவோயிஸ்டு கூட்டாளி என்கிறார் சு.சுவாமி
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைக் கண்டு சிறுபான்மையினர் அச்சப்படுகின்றனர் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் கருத்து தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்பட்டு உச்சகட்ட பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அவருக்கு எதிராக கல்வியாளர்கள் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த வரிசையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னும் இணைந்துள்ளார். இது பற்றி கூறிய அமர்த்தியா சென், மோடியைக் கண்டு சிறுபான்மையினர் அச்சப்படுவதற்கு அவரது நடவடிக்கைகள் காரணம். இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். நானும் வாக்களிப்பேன் என்றார்.
மாவோயிஸ்டுகள் கூட்டாளி சென்
அமர்த்தியா சென்னின் இந்த கருத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, அவர் மாவோயிஸ்டுகளுக்காகவும் இடதுசாரி நண்பர்களுக்காகவும் பேசக் கூடியவர் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.