ஒட்டகங்களைக் கொல்ல தடை... தீவிர ஆலோசனையில் ராஜஸ்தான் அரசு!
டெல்லி: பாலைவன கப்பல் எனப் போற்றப்படும் ஒட்டகங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக அவற்றைக் கொல்ல தடை விதிப்பது குறித்து ராஜஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்களின் பயன்பாடு அதிகம். ஆனால், கடந்த சில வருடங்களாக அங்கு ஒட்டகங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. எனவே, ஒட்டகங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு.
புனித விலங்காகக் கருதப்படும் பசுக்களை கொல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைப் போல, ஒட்டகங்களைக் கொல்லவும் தடை விதிக்கப் பட உள்ளது. மேலும் ஒட்டகங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாக்கப்பட்ட விலங்கு...
இதன் முதல் கட்டமாக ஒட்டகத்தை ‘‘பாதுகாக்கப்பட்ட விலங்கு'' என்று அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.
2வது மாநில விலங்கு...
சமீபத்தில் ராஜஸ்தானின் இரண்டாவது மாநில விலங்கு என்ற அந்தஸ்தை அம்மாநில அரசு ஒட்டகத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கணக்கெடுப்பு...
ராஜஸ்தானில் ஒட்டகங்கள் பற்றிய கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடைசியாக 2012-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ராஜஸ்தானில் 3.26 லட்சம் ஒட்டகங்களே இருப்பதாக தெரிய வந்துள்ளது.
குறைந்த எண்ணிக்கை...
இது கடந்த 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு எண்ணிக்கையை விடக் குறைவாகும். ஏனெனில் அப்போது 4.5 லட்சம் ஒட்டகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது.
பயன்பாடு குறைவு...
விவசாயம் மற்றும் போக்குவரத்திற்கு ஒட்டகங்களின் பயன்பாடு குறைந்துள்ளதே இந்த எண்ணிக்கை குறைவிற்குக் காரணம் எனச் சொல்லப் படுகிறது.
பொருளாதார வளர்ச்சி...
மேலும், ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதன் மூலம் மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தலாம் என அம்மாநில அதிகாரிகள் கருதுகிறார்களாம்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications