மிசோரம் பரிதாபம்.. சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் முதல்வர் லால் தன்வாலா!
Recommended Video
அய்ஸ்வால் : மிசோரம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும், முதலமைச்சருமான லால் தன்வாலா தோல்வியடைந்தார்.
2 தொகுதிகளில் போட்டியிட்ட அவர், செர்சிப் தொகுதியில், சுயேட்சை வேட்பாளர் லால்நுன்லுங்காவிடம் தோல்வியை தழுவி உள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் அவர், 283 வாக்குகள் வித்தியாசத்தில் லால் நன் துலங்காவிடம் வெற்றியை பறிகொடுத்தார். மற்றொரு தொகுதியான சம்பாயிலும் அவர் தோல்வி அடைந்தார்.
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தற்போது வரை ஆளும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 27 இடங்களிலும், பாஜக 1 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
மொத்தம் பதிவான 80 சதவீத வாக்குகளில் மிசோ தேசிய முன்னணி 38 சதவீதம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 30.7 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
ஆட்சி பறிபோன நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் தோல்விக்கு யார் காரணம் என்ற வார்த்தை போரும் தொடங்கி உள்ளது. அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான மலியானா, மிசோரம் மக்கள் இயக்கத்தை குற்றம்சாட்டி உள்ளார். பழமையான காங்கிரஸ் கட்சியை அந்த இயக்கம் தோற்கடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.