மோடி, ஆதித்யநாத் பயன்படுத்திய உடைகள் விற்பனைக்கு.. அமேசானில் களமிறங்கும் ஆர்எஸ்எஸ்!
பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயன்படுத்திய பொருட்களை இணையத்தில் விற்க போவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயன்படுத்திய பொருட்களை இணையத்தில் விற்க போவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தீன் தயாள் தாம் என்ற நிறுவனம் மதுராவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு சொந்தமானது ஆகும்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் அமேசானில் சில முக்கியமான பாரம்பரிய பொருட்களை விற்க இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மோடி பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.
பொதுவாக மருந்து
இந்த நிலையில் இந்த நிறுவனம் முதலில் மருந்துகளையும் சாதாரண பொருட்களையும் இணையத்தில் விற்க போவதாக கூறியுள்ளது. அதன்படி அமேசான் இணையத்தில் சோப், பேஸ்ட், பிரஷ் ஆகியவற்றை இந்த நிறுவனம் விற்க இருக்கிறது. அதை வைத்து இணைய வியாபாரம் எப்படி இருக்கிறது என்று பார்க்க போகிறது.
கோமிய பொருட்கள்
அதன்பின் கோமியத்தை விற்க போகிறது. வெறும் கோமியம் மட்டுமில்லாமல் கோமியத்தில் செய்யப்பட்ட ஜூஸ், அதில் செய்யப்பட பேஸ்ட், சாணியில் செய்யப்பட்ட சோப், முக கிரீம் ஆகியவற்றை விற்க இருக்கிறது. அமேசானில் இது எல்லாம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நேரடியாக வாங்குவார்கள்
இதை கிராமத்தினர்களிடம் இருந்து நேரடியாக வாங்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதாவது கிராமத்தில் மாடு வைத்து இருப்பவர்கள் இதனால் பயன் அடைவார்கள் என்றுள்ளது. பாரம்பரியம் வளரும். நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
குர்தா
அது மட்டுமில்லாமல் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயன்படுத்திய குர்தா மாடலில் ஆடை விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 10 மாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர்கள் இதற்கு முன் பயன்படுத்த ஆடைகள், கர்சீப்புகளை விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.