அந்தமான் சென்ற பிரதமர் மோடி.. சிறையில் வீர் சவார்கருக்கு மரியாதை
போர் பிளேர்: போர்ட் பிளேரில் உள்ள சிறையை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கு வீரசவார்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அந்தமான் நிகோபர் தீவில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அந்தமானின் பிரசித்தி பெற்ற சிறைச்சாலையையும் பிரதமர் பார்வையிட்டார். அங்கு வீர் சவார்கர் சிறைக்கு சென்ற பிரதமர் மோடி, தரையில் அமர்ந்து கைகளை கட்டிக் கொண்டு கண்களை மூடி வீர் சவார்கரின் படத்துக்கு மரியாதை செய்தார்.
Andaman & Nicobar: PM @narendramodi pays tribute to #VeerSavarkar in Savarkar cell in Cellular Jail. pic.twitter.com/t9MFMkaFnP
— All India Radio News (@airnewsalerts) December 30, 2018
இதையடுத்து மோடி தனது டுவிட்டரில் கூறுகையில் இந்த செல்லூரார் சிறையில் அடைக்கப்பட்டவர்களுள் வீர் சவார்கரும் ஒருவர். அவர் இருந்த சிறைக்கு சென்றிருந்தேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திர போராட்ட வீரர்களையும் பல்வேறு தேசியவாதிகளையும் ஆங்கிலேயர்கள் இங்குதான் அடைத்து வைத்திருந்தனர்.
Among those imprisoned at Cellular Jail was the great Veer Savarkar. I visited the cell where the indomitable Veer Savarkar was lodged. Rigorous imprisonment did not dampen Veer Savarkar’s spirits and he continued to speak and write about a free India from jail too. pic.twitter.com/dbsyzuVUjA
— Narendra Modi (@narendramodi) December 30, 2018
கடுமையான சிறைவாசத்தின் போதும் வீர் சவார்கரின் வீரியத்தை குறைக்கவில்லை. சுதந்திரமான இந்தியாவுக்கே சிறையில் இருந்து கொண்டே தொடர்ச்சியாக அவர் பேசியும் எழுதியிருந்தார் என பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்ற மோடி அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டார். செல்லூர் சிறைக்கு 1911-ஆம் ஆண்டு வீர் சவார்கர் அடைக்கப்பட்டார். இவர் இந்துத்துவா தத்துவத்தை பின்தொடர்ந்தார்.