For Daily Alerts
Just In
காவிரி பிரச்சனை... மோடியால் தலையிட முடியாது... சொல்கிறார் சதானந்த கவுடா
பெங்களூரு: காவிரி பிரச்சனையில் தற்போது மோடியால் தலையிட முடியாது என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி பிரச்சனை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் பிரதமர் மோடியால் இந்தப் பிரச்சனையில் தற்போது தலையிட முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி பிரச்சனையில் தனது மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது சதானந்த கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து பெங்களூருவில் கலவரம் வெடித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று சந்திக்க உள்ள நிலையில், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments
English summary
PM Modi cannot intervene in the Cauvery issue as the matter is in the Supreme Court, said Central Minister Sathanantha Gowda.
Story first published: Wednesday, September 14, 2016, 16:17 [IST]