ஹிமாச்சலில் ராணுவ வீரர்களுடன் தீபாவாளி கொண்டாடிய மோடி!
ஹிமாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார்.
கின்னாவுர்: ஹிமாச்சல் பிரதேசத்தில் ராணுவத்தினர் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீசாருடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார்.
பிரதமர் மோடி கடந்த வாரம் Sandesh2Soldiers என்ற பிரசார இயக்கத்தை தம்முடைய ஆப் மூலம் தொடங்கினார். இதுதொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், நமது வீரர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்களை நான் தெரிவித்து விட்டேன். நமது நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் தீரத்தை நீங்களும் நினைவுகூர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என கூறியிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் விஸ்வரூபமாக டிரண்ட் ஆனது. மேலும் தம்முடைய வானொலி உரையிலும் தீபாவளியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறியிருந்தார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்துக்குச் சென்றார் பிரதமர் மோடி. அங்கு இந்தோ- திபெத் எல்லை போலீசார் மற்றும் ராணுவத்தினருடன் இணைந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார் மோடி.