வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுவது உறுதியானது!!
வாரணாசி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரடி காந்திநகர் மற்றும் வாரணாசி ஆகிய லோக்சபா தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி எம்.பியாக இருப்பவர் பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. மோடி அங்கு போட்டியிடுவதற்காகவே உத்தரப்பிரதேச பொறுப்பாளராக அவரது சகா அமித் ஷா களமிறக்கப்பட்டார்.
இந்த நிலையில் திடீரென தமது தொகுதியை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரளி மனோகர் ஜோஷி அடம்பிடித்தார். இதேபோல் குஜராத்தின் காந்திநகர் தொகுதியை விட்டுக் கொடுக்க முடியாது என்று அத்வானியும் கொடி தூக்கினார்.
இந்த நிலையில் தமது தொகுதியை விட்டுக் கொடுக்க முரளிமனோகர் ஜோஷி முன்வந்துள்ளார். இதனால் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது என்றே கூறப்படுகிறது.