For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் ஊழல்: சோனியாவை கைது செய்யும் தைரியம் மோடிக்கு இல்லை: கேஜ்ரிவால் 'பொளேர்'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.

ஹெலிகாப்டர் ஊழலை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சோனியா காந்திக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்று கேஜ்ரிவால் பேசியதாவது:

Modi does not have courage to arrest Sonia : Kejriwal

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் விவகாரம் தொடர்பாக மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகாலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.

சோனியா காந்தியைப் பார்த்து மோடி அச்சப்படுகிறார். அப்படி அச்சப்படாவிட்டால் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லாமல் போனது ஏன்?.

இவ்வாறு கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Delhi CM Arvind Kejriwal today said PM Modi did not have courage to arrest Congress chief Sonia Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X