பாசத்திற்கு அளவில்லை பாஸ்.. ருவாண்டா மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்கிறார் மோடி!
ஆப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக 200 பசு மாடுகளை அளிக்க இருக்கிறார்.
Recommended Video
கிகாளி: ஆப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக 200 பசு மாடுகளை அளிக்க இருக்கிறார்.
பிரதமர் மோடி ஐந்து நாள் பயணமாகி, ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மூன்று நாடுகளுக்கு சென்று இருக்கிறார். ருவாண்டா, தென்னாப்பிரிக்கா, உகண்டா ஆகிய நாடுகளுக்கு சென்று இருக்கிறார். இரண்டாவது முறையாக அவர் ஆப்ரிக்க நாடுகளுக்கு, சென்று இருக்கிறார்.
இந்த நிலையில்தான், அவர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பசு மாடுகளை பரிசளிக்க இருக்கிறார். இங்கிருந்து இதற்காக பசு மாடுகளை ஏற்றுமதி செய்ய இருக்கிறார்கள். எல்லாம் இந்திய இன, இளம் வயது பசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 200 பசு மாடுகளை அவர் ருவாண்டா நாட்டிற்கு அளிக்க இருக்கிறார். ஒரு வீட்டிற்கு ஒரு மாடு என்று 200 வீடுகளுக்கு அவர் இதை அளிக்க உள்ளார்.
அதேபோல் மக்கள் மத்தியில் பசு மாடு குறித்தும், அதன் பயன் குறித்தும் பேச உள்ளார் . மாடுகளை இலவசமாக கொடுப்பதால், மக்களின், வறுமை தீரும் என்று அவர் கூறியுள்ளார்.