For Daily Alerts
Just In
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐபி இயக்குநர் அஜித் தோவல் நியமனம்
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நாட்டின் உளவு அமைப்பான ஐ.பி.யின் முன்னாள் இயக்குநர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தவர் சிவசங்கர் மேனன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்தியில் பதவியேற்றதைத் தொடர்ந்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் தோமல், 1968ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தார். மேலும், இவர் உளவுத்துறையான ஐ.பி.யின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
English summary
The Narendra Modi government on Friday appointed former Intelligence Bureau (IB) chief Ajit Doval as National Security Adviser to the prime minister.
Story first published: Friday, May 30, 2014, 18:25 [IST]