For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்து கிராமங்களுக்கும் நிலையான மின்சாரம்.. மோடி ஆட்சி செய்த பெரும் சாதனை!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2015 ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் மோடி, இந்தியா முழுக்க அனைத்து கிராமங்களும் 1000 நாட்களில் மின்சார வசதி உள்ள கிராமங்களாக மாற்றப்படும் என்று கூறினார். இந்த நிலையில் மணிப்பூரில் உள்ள லெய்சாங் என்ற கிராமம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி மின்சார இணைப்பு பெற்றதன் மூலம் இந்தியா முழுக்க 100 சதவிகித கிராமங்கள் மின்சார வசதி பெற்று இருக்கிறது. இந்த சாதனை வெறும் 988 நாட்களில் செய்யப்பட்டுள்ளது.

கிராமங்களில் மின்சார வசதி ஏற்படுத்துவதுதான் பிரதமர் மோடியின் முக்கியமான ஆசைகளில் ஒன்று. மின்சார வசதி ஏற்படுத்தி தருவதாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியும் அவர் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் ஆகும். மோடியின் மொத்த 2014 தேர்தல் பிரச்சாரமும் முன்னேற்றம் மற்றும் ஊழலற்ற ஆட்சியை மையமாக கொண்டதுதான்.

Modi govts electrification drive: Rural India illuminated

கடந்த ஏப்ரல் 29ம் தேதி பிரதமர் மோடியின் டிவிட்டில், ''இந்தியாவின் முன்னேற்றத்தில் வரலாற்றில் நினைவு கொள்ள வேண்டிய நாள் இது'' என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ''நேற்று நாம் தற்போது பெரிய மாற்றத்தை செய்து இருக்கிறோம். இது பல இந்தியர்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்ற போகிறது. இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் தற்போது மின்சார வசதி உள்ளது.'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

1974ல் இந்திய சுதந்திரத்தின் போது மொத்தம் 1500 கிராமங்களுக்கு மட்டும்தான் மின்சார வசதி இருந்தது, 1991ன் படி 481, 124 கிராமங்களுக்கு மின்சார வசதி உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

[என்ன கொடுமை இது.. 92 வயது பாட்டியை சரமாரியாக அடித்த 102 வயது தாத்தா.. கைது]

2018ன் படி 597,464 கிராமங்களில் தற்போது அனைத்து 597,464 கிராமங்களுக்கும் (100%) மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 10 சதவிகித வீடுகளுக்கு ஒரு கிராமத்தில் மின்சார வசதி தேவைப்பட்டாலும் அங்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் பிரதமர் மோடி இதனுடன் நிற்கவில்லை. எத்தனை கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுக்கப்பட்டதோ அதேபோல் எல்லா இடங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவை ஒளிமிக்க நாடாக மாற்ற தீவிர முயற்சி செய்து வருகிறது.

English summary
Prime Minister Narendra Modi had promised on 15 August 2015 that every village in the country would be electrified within 1,000 days. When Leisang, a tiny village in Manipur, was electrified on April 28, 2018, the Modi government achieved 100% electrification of rural India and it was done in 988 days of making that promise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X