பிலிப்பைன்ஸ்சில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி- சீனாவுக்கு செக்?
அமெரிக்கா அதிபர் ட்ரம்பை நவம்பரில் மோடி சந்திக்க இருக்கிறார். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் முன்னேற்றத்துக்கு செக் வைக்கும் வகையில் இச்சந்திப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
டெல்லி : பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் பிலிப்பைன்ஸில் அடுத்த மாதம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இச்சந்திப்பின் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முன்னேற துடிக்கும் சீனாவுக்கு செக் வைக்கப்படலாம் என கருதப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அடுத்த மாதம் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
அப்போது பிலிப்பைன்ஸுக்கு வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அமெரிக்கா ட்ரம்ப்பும் வருகை தருகிறார். ஆகையால் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக முன்னேறி வரும் சீனாவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.