For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு

பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 நாட்கள் மட்டுமே பேசியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்றத்தை விட வெளிநாடுகளில் அதிகம் இருந்த பிரதமர் மோடி- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 நாட்கள் மட்டுமே பேசியுள்ளார். இந்த தகவல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

    இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்படும். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எத்தனை

    எத்தனை

    பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.

    பேசியது என்ன

    பேசியது என்ன

    நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார்.

    அதிகம்

    அதிகம்

    அவர் இந்த நான்கு நாட்களில் நாடாளுமன்றத்தில் இருந்ததை விட அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார். மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய பேசியுள்ளார். எல்லா வாரமும் வானொலி மூலம் , மான் கி பாத்தில் பேசியுள்ளார். ஒரு முறை பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பேசியுள்ளார். ஆனால் மக்கள் பிரச்சனைகள் எதிலும் அவர் பேசவேயில்லை.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    மக்களின் முக்கியமான பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் உயர்வு, ஜிஎஸ்டி, மத பிரச்சனை, ஜாதி படுகொலை, வங்கிகள் செய்யும் மோசடிகள் என எதிலும் பிரதமர் பேசவில்லை. கூடுதல் தகவலாக, பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார். அவர் அதிக நாட்களை நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டில்தான் கழித்துள்ளார்.

    English summary
    Modi just came to parliament only 19 days in all 4 years of his rule. Case filed against Modi, by Aam Aadmi in Delhi High Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X