இந்தியாவுக்கானது பாஜக... மொழி ஒரு தடையல்ல... கர்நாடக தேர்தல் குறித்து மோடி!
கர்நாடகாவுக்கு அனைத்து மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி உறுதி.
டெல்லி: ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கானது பாஜக என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் மொழி ஒரு தடையே இல்லை. கர்நாடக நலனுக்காக பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து, அதில் பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை.
கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக என்பது ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தி வந்தன. கோவா, குஜராத், மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வென்றது.
பாஜக என்பது இந்தியாவுக்கானது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் பாஜகவின் ஆட்சி உள்ளது.
கர்நாடக மக்களின் நலனுக்கான அனைத்து மேம்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த எந்த தடையும் இனி இல்லை.