சுருக்குப் பையில் வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றிய மோடி தாயார்!
அகமதாபாத் வங்கியில் மோடியின் தாயார் ஹீராபென் சிறப்பு அனுமதியுடன் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினார்.
அகமதாபாத்: பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் குஜராத் காந்திநகர் வங்கியில் சிறப்பு அனுமதியுடன் சிரமமின்றி ரூபாய் நோட்டுகளை மாற்றினார்.
நாடு முழுவதும் நவம்பர் 8-ந் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடந்த 1 வாரமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
நீண்ட வரிசைகளில் கால்கடுக்க நின்றும் கூட ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத சோகத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இதனிடையேஎ பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று குஜராத்தின் காந்திநகரில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்றார்; அங்கு கூட்டமே இல்லாமல் இருந்தது.
Gujarat: PM Narendra Modi's mother Heeraben Modi at a bank in Gandhinagar to exchange currency of Rs 4500 #DeMonetisation pic.twitter.com/Omqh51Gv7D
— ANI (@ANI_news) November 15, 2016
அத்துடன் ஹீராபென்னிடம் விண்ணப்பம் ஏற்கனவே பெறப்பட்டிருந்தது. இதனால் அவர் எந்த ஒரு சிரமும் இல்லாமல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை எளிதாக மாற்றினார்.
Gujarat: PM Narendra Modi's mother Heeraben Modi avails new currency notes at a bank in Gandhinagar #DeMonetisation pic.twitter.com/vAhXhY0Iu6
— ANI (@ANI_news) November 15, 2016