திரிபுராவில் "மோடி சர்க்கார்".. ஏழை முதல்வர் மாணிக் சர்க்காருக்கு இந்தப் பரிசு நியாயமா மக்களே!
திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
Recommended Video
அகர்தலா: திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
59 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இடது சாரிகளின் கோட்டையாக இருந்த திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சியே நடைபெற்று வந்தது.
களம் கண்ட காங்கிரஸ்
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பாஜக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. நாட்டின் ஏழை முதல்வர் எளிமையான முதல்வர் என போற்றப்பட்ட மாணிக் சர்க்காரை முன்னிலைப்படுத்தி களம் கண்டது காங்கிரஸ்.
பாஜக 40 இடங்களில் வெற்றி
காலையில் லீடிங்கில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி நேரம் செல்ல செல்ல பெரும் பின்னடைவை சந்தித்தது. பாஜக 40 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
காங்கிரஸ் படுதோல்வி
இதன்மூலம் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இடதுசாரிகள் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
முடிவுக்கு வந்த மாணிக் சர்க்கார்
நாட்டின் ஏழ்மையான முதல்வர் சொந்த வீடு கூட இல்லாத முதல்வர், எளிமையின் மறு உருவம் என்றெல்லாம் போற்றப்பட்ட திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் 20 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
தகர்ந்த கோட்டை
மேற்குவங்கத்தை தொடர்ந்து இடது சாரிகளின் இன்னொரு கோட்டையான திரிபுராவும் தகர்ந்துள்ளது. 25 வருடங்களில் இல்லாத தோல்வியை சந்தித்துள்ளதால் மார்க்சிஸ்ட் கட்சி கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.