கேரள மக்களின் கலாசாரத்தை அவமதித்துவிட்டது ஆளும் கம்யூனிஸ்ட் அரசு .. மோடி தாக்கு
திருச்சூர்: கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, கேரள மக்களின் கலாச்சாரத்தை மீறி மக்களின் அனைத்து நம்பிக்கை அம்சங்களையும் அவமதித்து விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி, தஞ்சாவூர் மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தைத் திறந்து வைத்தல் என்று பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி.
அதன் பின்னர் கேரளா சென்ற பிரதமர், கொச்சியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பின்னர் திருச்சூரில் மக்களிடையே பேசினார். அப்போது, கேரள அரசு, சபரிமலை விவகாரத்தில் அனைத்து கலாச்சார அம்சங்களையும் மீறிவிட்டது. இதன் மூலம் மக்களின் நம்பிக்கைக்கு கேடு விளைவித்து விட்டது.
கேரள மக்களின் கலாசாரத்தை அவமதித்ததன் மூலம் தேசத்தின் நலனை குறைத்துள்ளது மாநில அரசு. கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பெண்களுக்கு சம உரிமை, அதிகாரம் வழங்குவதை விரும்புவதில்லை. சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளா