பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கியது அம்பலம்.. வைரலான ஷமி - ஹசின் ஜகான் போன் உரையாடல்
முகமது ஷமி மனைவி ஹசின் ஜகானுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
Recommended Video
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜகானுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் அவர் பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் வாங்கியது உறுதியாகியுள்ளது.
ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
சூதாட்டம்
இந்த நிலையில் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். இதற்காக அவர் அலீஷ்பா என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லியுள்ளார். முகமது பாய் என்ற சூதாட்டக்காரர் அலீஷ்பா மூலம் ஷமியிடம் பணம் கொடுப்பார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனை கடந்த 3 வருடங்களாகவே நடந்து வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
போன் பதிவு
இந்த நிலையில் ஷமி அவரது மனைவியிடம் இரண்டு நாள் முன்பு பேசிய போன் பதிவு வெளியாகி இருக்கிறது. அதில் அவர் தனது மனைவியை சமாதானப்படுத்துகிறார். ஆனால் அவர் மனைவி அவருடன் சண்டை போடுவது பதிவாகி இருக்கிறது.
உண்மை
இந்த ஆடியோவில், அவர் பாகிஸ்தானை சேர்ந்த முகமது பாயிடம் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டு இருக்கிறார். பாகிஸ்தான் பெண் மூலம் அந்த பணம் கொடுக்கப்பட்டதையும் அவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார். சண்டை போடும் போது அப்படியே பேசி இருக்கிறார்.
பிசிசிஐ
இதனால் தற்போது பிசிசிஐ இவர் மீது விசாரணை நடத்த இருக்கிறது. எதற்காக பணம் வாங்கினார் என்று விசாரிக்க உள்ளது. அதேபோல் சூதாட்டம் நடந்தது உண்மையா என்றும் கேள்வி கேட்க இருக்கிறது.