ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார்.. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.. மனைவி பரபரப்பு புகார்
ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
முதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.
இவர் சூதாட்டம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இவர் மீது போலீசில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
ஆபாசம்
ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
சூதாட்டம்
இந்த நிலையில் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். பாகிஸ்தான் பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர்கள் மூலமாக ஷமி சூதாட்டம் செய்தார் என்றும் கூறியுள்ளார். ஷமி என்னை ஏமாற்றினார், அவருக்கு இந்த நாட்டை ஏமாற்றுவது ஒன்னும் சிரமமான காரியம் இல்லை என்று அவர் அவர் மனைவி குறிப்பிட்டு இருக்கிறார்.
பாகிஸ்தானி
இதற்காக அவர் அலீஷ்பா என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லியுள்ளார். முகமது பாய் என்ற சூதாட்டக்காரர் அலீஷ்பா மூலம் ஷமியிடம் பணம் கொடுப்பார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனை கடந்த 3 வருடங்களாகவே நடந்து வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
போலீசில் புகார்
தற்போது ஷமியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஷமி எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.