ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இடஒதுக்கீடு எதிர்ப்பு பேச்சால் பீகாரில் பாதிப்பு இல்லை - ரவிசங்கர் பிரசாத்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சு எதிர்விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
பீகார் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். பீகாரில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பீகார் வளர்ச்சிக்கு நேர்மையுடன் நிதிஷ்குமார் பாடுபடுவார் என அனைவரும் எதிர்பார்க்கிறோம்.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டது என கூறப்படுவது முற்றிலும் தவறானது. நாங்கள் தேர்தல் முடிவுகளை வைத்து தோல்விக்கான காரணங்களை விவாதிப்போம்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.