For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரில் வந்து டோல்கேட்டில் கொள்ளையடித்த குரங்கு... பணத்துடன் தப்பிஓட்டம்.. உ.பி.யில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

கான்பூர்: இந்த உலகில் பல விசித்திரமான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அப்படித்தான் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. அந்த மாநிலத்தின் கான்பூர் சுங்கச்சாவடிக்கு காரில் வந்த குரங்கு, சுங்கச்சாவடியில் ஊழியரிடம் ரூ.5 ஆயிரத்தை கொள்ளை அடித்துவிட்டு தப்பிஓடிவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே அக்பர்பூர் கோத்வாலி என்ற இடத்தில் சுங்கச்சாவடி செயல்படுகிறது. இந்த சுங்கசாவடிக்கு கார் ஒன்று வேகமாக வந்தது. அப்போது காருக்குள் இருந்த குரங்கு கட்டணம் வசூலிப்பவரின் அறைக்குள் திடீரென தாவியது.

monkey stole Rs 5,000 cash from a toll plaza in Kanpur

இதனால் மிரண் போய் பார்த்த ஊழியரை சோதித்த குரங்கு, அவரது பாக்கெட்டை நோட்டமிட்டது. பின்னர் ஊழியரின் அருகே மேஜையில் கட்டாக இருந்த ரூ.5 ஆயிரத்தை அபேஸ் செய்து கொண்டு தப்பிஓடிவிட்டது. அப்போது காரில் இருந்தவர் குரங்கிடம் இருந்து பணத்தை பறிக்க பார்த்தார். ஆனால் அது அவரிடம் இருந்தும் தப்பி ஓடி விட்டது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த ஊழியர் மிரண்டு போய் தப்பியோடிய குரங்கை வேடிக்கை பார்த்தார். கடந்த ஏப்ரல் 25ம் தேதி நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

மிட்நைட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் நகர்வலம்.. சிசிடிவி காட்சியால் தாம்பரத்தில் பீதிமிட்நைட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் நகர்வலம்.. சிசிடிவி காட்சியால் தாம்பரத்தில் பீதி

இதனிடைய குரங்கு பணத்தை திருடியது குறித்து காவல் துறையில் சுங்கச்சாவடி தலைமை அதிகாரி மனோஜ் சர்மா புகார் அளித்துள்ளார். எந்த காருக்குள் இருந்து குரங்கு குதித்து வந்ததோ அந்த கார் எண்ணை குறித்து வைத்துள்ள அதிகாரிகள் கார் குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

English summary
Monkey Arrives in Car, Flees After Stealing Money From Toll Booth in Kanpur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X