அப்பாடா.. ஒரு வழியாக, நாளை மறுநாள் ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவமழை!
டெல்லி: தென் மேற்குப் பருவ மழை, நாளை மறுநாள், ஜூன் 8ம் தேதி ஆரம்பிக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு அதிகப்படியான மழைப்பொழிவை தரவல்லது தென்மேற்கு பருவமழை கால கட்டமாகும். எனவே தென் மேற்கு பருவமழையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
வழக்கமாக, ஜூன் 1ம் தேதி, தென் மேற்கு பருவமழை, கேரளாவில் காலடி எடுத்து வைக்கும். ஆனால், இந்த வருடம், தென் மேற்கு பருவமழை, இதுவரை கேரளாவிற்கு வரவில்லை.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ஜூன் 8ம் தேதி, கேரளாவில், தென் மேற்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. இது செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் செல்லும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா.. பரபரப்பான எதிர்பார்ப்பில் தமிழகம்!
தென் மேற்கு பருவமழை காலம்தான் இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றக் கூடிய காலகட்டம். பல மாநிலங்களின் விவசாய உற்பத்தி மற்றும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க கூடிய பருவமழை காலமும் இதுதான். எனவே, தென் மேற்கு பருவமழை வருகையை அனைத்து தரப்பினருமே, ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.